- எழுதியவர் Vignesh
- கடைசியாக மாற்றப்பட்டது 17-06-2022
தேர்வு சுருக்கம்
தமிழ்நாடு மாநில சமச்சீர் வாரியப் பள்ளித் தேர்வுகள் (உயர்நிலை) & மேல்நிலைத் தேர்வுகள் வாரியம் என்பது பெரும்பாலும் தமிழ்நாடு மாநில பள்ளி தேர்வு வாரியம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாநில சமச்சீர் வாரியத்தில் படிக்கும் மாணவர்களுக்கான வாரியத் தேர்வுகளை நடத்தும் கடுமையான பொறுப்பு இருக்கிறது. இது 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கும் மதிப்பெண் சான்றிதழ்கள், உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளைத் தொடர முக்கியமான மற்றும் மதிப்புமிக்க ஆவணமாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தில் 2022ஆம் ஆண்டுக்கான 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைக் கணக்கிடுவதற்கான மதிப்பீட்டு அளவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த மதிப்பீட்டு அளவுகோல்களின்படி, 10 ஆம் வகுப்பு சமச்சீர் வாரியத் தேர்வு மதிப்பெண்களுக்கு (அதிக மதிப்பெண்கள் பெற்ற மூன்று பாடங்களின் சராசரி) 50 சதவீத முக்கியத்துவம் வழங்கப்படும். மாறாக, 11 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுக்கு 20 சதவீதம் (ஒவ்வொரு பாடத்திலும் எழுதப்பட்டது) முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும், சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு செய்முறை மற்றும் உள் மதிப்பீட்டிற்கு 30 சதவீதம் முக்கியத்துவம் வழங்கப்படும்.
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தேர்வை நடத்தியது. TN கல்வி வாரியம் 2022 மார்ச் மாதத்தில் தேர்வை நடத்தியது. அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
கையேடு
12ஆம் வகுப்பு தமிழ்நாடு மாநில வாரிய கையேடை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்- http://www.dge.tn.gov.in/docs/examina/HSE_E.pdf
தேர்வு விளக்கம்
தமிழ்நாடு மாநில சமச்சீர் வாரியத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு தேர்வுக்கு தேவையான அனைத்து விவரங்களும் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை, தேர்வு, தேர்வு நடைபெறும் கால இடைவெளி, கிடைக்கப்பெறும் வெவ்வேறு விருப்ப மொழிகள், தமிழ்நாடு மாநில வாரியத்தின் முக்கிய தேதிகள் போன்றவைகளை பற்றி சுருக்கமான தகவல்களை வழங்குகிறது.
வாரியத்தின் பெயர் |
தமிழ்நாடு மாநில கல்வி வாரியம் |
வகுப்பு |
12ஆம் வகுப்பு |
தேர்வுத் தேதி |
மே 2022 |
நுழைவு சீட்டு கிடைக்கும் தேதி |
ஏப்ரல் 2022 |
தேர்வு முடிவுகள் அறிவிக்கும் தேதி |
ஜூன் 2022 |
கட்டுரையில் இருப்பது |
தமிழ்நாடு வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
Tamil Nadu Board Official Website |
அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பு
https://apply1.tndge.org/dge-notification/HRSEC
Embibe அறிவிப்பு பலகை/அறிவிக்கைகள்
சமீபத்திய அறிவிக்கைகள்
TN கல்வி வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பொதுதேர்வுகளை நடத்துகிறது. COVID-19 தொற்றினால் 2021 ஆம் ஆண்டு TN 12 ஆம் வகுப்பு தேர்வுகளை இந்த வாரியம் ரத்து செய்தது.
மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணைப் பயன்படுத்தி தமிழ்நாடு 12ஆம் வகுப்பு முடிவுகளை சரிபார்க்கலாம். TN வாரியம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23, 2022 அன்று கல்வி வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.dge.tn.gov.in/ என்பதில் வெளியிடப்படும்.
டிரெண்டிங் செய்திகள்
தமிழ்நாடு அரசு தேர்வுகள் இயக்ககம் தற்காலிக தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுகளின் அட்டவணையில் உள்ள தகவல்கள் மாணவர்கள் தேர்வு குறித்து நன்கு புரிந்துகொள்ள உதவும். TN வாரியம் மார்ச் 2023-க்குள் இந்த தேர்வை நடத்தலாம்.
தேர்விற்கான மதிப்பெண் பங்கீடு
தேர்விற்கான நேர பங்கீட்டு விவரங்கள்- மொத்த நேரம்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி தமிழ்நாடு பொதுதேர்வுகள் 3 மணி நேரம், அதாவது ஒவ்வொரு பாடத்திற்கும் 180 நிமிடங்களுக்கு நடத்தப்படுகிறது. மாணவர்கள் தேர்வு தொடங்குவதற்கு முன் வினாத்தாளைப் பார்க்க 15 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தேர்வு காலை 9:15 மணிக்குத் தொடங்கினால், மாணவர்கள் காலை 9:00 மணிக்கு வினாத்தாளைப் பெறுவார்கள். மேலும் அவர்கள் காலை 9:15 மணிக்கு கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்க வேண்டும்.
ப்ளூபிரிண்ட் பிரிவில், ஒரு வினாத்தாளில் ஒவ்வொரு பகுதியையும் தீர்க்க தேவையான நேரத்தையும், ஒவ்வொரு பாடத்திற்கான கடின தன்மையையும், நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
தேர்வு பாடத்திட்டம்
சமச்சீர் கல்வி இயற்பியல் பாடத்திட்டம்
அத்தியாய எண் |
சமச்சீர் கல்வி அத்தியாய பெயர் |
தலைப்புகள் |
1 |
நிலை மின்னியல் |
- அறிமுகம்
- கூலூம் விதி
- மின்புலம் மற்றும் மின்புலக் கோடுகள்
- மின் இருமுனையும் அதன்
- பண்புகளும்
- நிலை மின்னழுத்தமும் மின்னழுத்த ஆற்றலும்
- காஸ் விதியும் அதன் பயன்பாடுகளும்
- கடத்திகள் மற்றும் மின்காப்புகளின் நிலை மின்னியல் பண்புகள்
- மின்தேக்கிகள் மற்றும்
- மின்தேக்குத்திறன்
- மின்கடத்தியில் மின்துகள்களின்
- பரவலும் கூர்முனைச் செயல்பாடும்
|
2 |
மின்னோட்டவியல் |
- மின்னோட்டம்
- ஓம் விதி
- மின் சுற்றுகளில் ஆற்றல் மற்றும் திறன்
- மின்கலங்களும் மின்கலத்
- தொகுப்புகளும்
- கிர்க்காஃப் விதிகள்
- மின்னோட்டத்தின் வெப்ப விளைவு
- வெப்ப மின் விளைவு
|
3 |
காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் |
- காந்தவியல் ஓர் அறிமுகம்
- காந்தவியலின் கூலூம் எதிர்த்தகவு இருமடிவிதி
- சீரான காந்தப்புலத்தில் உள்ள சட்டகாந்தத்தின் மீது செயல்படும் திருப்புவிசை
- காந்தப்பண்புகள்
- காந்தப்பொருட்களின் வகைப்பாடு
- காந்தத்தயக்கம்
- மின்னோட்டத்தின் காந்த விளைவுகள்
- பயட் – சாவர்ட் விதி
- ஆம்பியரின் சுற்று விதி
- லாரன்ஸ் விசை
- மின்னோட்டச் சுற்றின் மீது செயல்படும் திருப்பு விசை
|
4 |
மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் |
- மின்காந்தத் தூண்டல்
- சுழல் மின்னோட்டங்கள்
- தன் மின்தூண்டல்
- தூண்டப்பட்ட மின்னியக்குவிசையை
- உருவாக்கும் முறைகள்
- மாறுதிசை மின்னோட்ட மின்னியற்றி
- மின்மாற்றி
- மாறுதிசை மின்னோட்டம்
- மாறுதிசை மின்னோட்டச் சுற்றுகளின் திறன்
- LC சுற்றுகளில் அலைவு
|
5 |
மின்காந்த அலைகள் |
- அறிமுகம்
- மின்காந்த அலைகள்
- நிறமாலையின் வகைகள் – வெளியிடு மற்றும் உட்கவர் நிறமாலை – ஃபிரனாஃபர் வரிகள்
|
6 |
ஒளியியல் |
- அறிமுகம்
- கோளக ஆடிகள்
- ஒளியின் வேகம்
- ஒளிவிலகல்
- ஒற்றை கோளகப்பரப்பில் ஏற்படும் ஒளிவிலகல்
- மெல்லிய லென்ஸ்கள்
- முப்பட்டகம்
- ஒளியைப்பற்றிய கொள்கைகள்
- ஒளியின் அலைப்பண்பு
- குறுக்கீடடு விளைவு
- விளிம்பு விளைவு
- ஒளியின் தளவிளைவு
- ஒளியியல் கருவிகள்
|
7 |
கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருைமப்பண்பு |
- அறிமுகம்
- ஒளிமின் விளைவு
- பருப்பொருள் அலைகள்
- X-கதிர்கள்
|
8 |
அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் |
- அறிமுகம்
- வாயுக்களின் வழியே மின்னிறக்கம்
- அணு மாதிரிகள்
- அணுக்கருக்கள்
- அணுக்கரு விசை
- கதிரியக்கம்
- அணுக்கரு பிளவு
- அணுககரு இ்ணைவு
|
9 |
குறைகடத்தி எலக்ட்ரானியல் |
- அறிமுகம்
- குறை கடத்திகளின் வகைகள்
- டையோடுகள்
- இரு முனை சந்தி டிரான்சிஸ்டர்
- இலக்கமுறை எலக்ட்ரானியல்
- பூலியன் இயற்கணிதம்
- டீ மார்கனின் தேற்றங்கள்
|
10 |
தகவல் தொடர்பு அமைப்புகள் |
- அறிமுகம்
- பண்பேற்றம்
- எலக்ட்ரானிய தகவல் தொடர்பு
- அ்மைப்பின் உறுப்புகள்
- விண்ணலைக்கம்பியின் அளவு
- மின்காந்த அலைகளின் பரவல்
- செயற்கைக்கோள் தகவல்தொடர்பு
- ஒளி இழைத் தகவல்தொடர்பு
- ரேடார் மற்றும் அதன் பயன்பாடுகள்
- செல்பேசி தகவல்தொடர்பு
- இணையம்
- உலகளாவிய நிலையறியும் அமைப்பு
- விவசாயம், மீன்வளம் மற்றும் சுரங்கம் ஆகிய துறைகளில் தகவல்தொடர்புத் தொழில்நுட்பத்தின் பயன்பாடு
|
11 |
இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் |
- அறிமுகம்
- நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பம்
- எந்திரனியல்
- மருத்துவ நோயறிதல் மற்றும் சிகிச்சையில் இயற்பியல்
|
சமச்சீர் கல்வி வேதியியல் பாடத்திட்டம்
சமச்சீர் கல்வி தாவரவியல் பாடத்திட்டம்
அலகு பெயர் |
அத்தியாய எண் |
சமச்சீர் கல்வி அத்தியாய பெயர் |
தலைப்புகள் |
தாவரங்களில் இனப்பெருக்கம |
1 |
தாவரங்களில் பாலிலா இனப்பெருக்கம் மற்றும் பாலினப்பெருக்கம |
- பாலிலா இனப்பெருக்கம்
- தழைவழி பெருக்கம்
- பாலினப் பெருக்கம்
- கருவுறுதலுக்கு முந்தைய அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள்
- கருவுறுதல்
- கருவுறுதலுக்குப் பின்னுள்ள அமைப்புகள் மற்றும் நிகழ்வுகள்
- கருவுறா இனப்பெருக்கம்
- பல்கருநிலை
- கருவுறாக்கனிகள்
|
மரபியல் |
2 |
பாரம்பரிய மரபியல் |
- பாரம்பரியமும் வேறுபாடுகளும்
- மெண்டலியம்
- ஒரு பண்புக் கலப்பு
- மரபணுக்குள்ளே நிகழும் இடைச்செயல்கள்
- மரபணுக்களுக்கிடையே நிகழும் இடைச்செயல்கள்
- பல்காரணியப் பாரம்பரியம் – கோதுமையில் பல்மரபணு பாரம்பரியம் (விதையுறை நிறம்)
- குரோமோசோம் தவிர்த்த பாரம்பரியம் (Extra Chromosomal Inheritance) அல்லது உட்கரு தவிர்த்த பாரம்பரியம் (Extra Nuclear Inheritance) (சைட்டோபிளாசம் சார்ந்த பாரம்பரியம் – Cytoplasmic Inheritance)
|
3 |
குரோமோசோம் அடிப்படையிலான பாரம்பரியம் |
- பாரம்பரியத்திற்கான குரோமோசோம் கோட்பாடு
- பிணைப்பு
- குறுக்கேற்றம்
- பல்கூட்டு அல்லீல்கள்
- சடுதிமாற்றம்
|
உயிரிதொழில்நுட்பவியல் |
4 |
உயிரிதொழில்நுட்பவியல் நெறிமுறைகளும் செயல்முறைகளும் |
- உயிர்தொழில்நுட்பவியலின் வளர்ச்சி
- பாரம்பரிய உயிரிதொழில்நுட்பவியலின் முறைகள்
- நவீன உயிரிதொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள்
- மரபணுப் பொறியியலுக்கான கருவிகள்
- மரபணு மாற்ற முறைகள்
- மறுகூட்டிணைவு செல்களுக்கான சலிக்கை செய்தல்
- மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள
- உயிரிதொழில்நுட்பவியலின் பயன்பாடுகள்
|
5 |
தாவரத் திசு வளர்ப்பு |
- திசு வளர்ப்பின் அடிப்படைக்கொள்கைகள்
- தாவரத் திசு வளர்ப்பு
- தாவரங்களின் மீளுருவாக்க வழித்தடம்
- தாவரத் திசு வளர்ப்பின் பயன்பாடுகள்
- தாவர மரபணுசார் வளங்களைப் பாதுகாத்தல்
- அறிவுசார் சொத்துரிமை
- உயிரி தொழில்நுட்பவியலின் எதிர்காலம்
|
தாவரச் சூழ்நிலையியல் |
6 |
சூழ்நிலையியல் கோட்பாடுகள் |
- சூழ்நிலையியல்
- சூழ்நிலையியல் காரணிகள்
- சூழ்நிலையியல் தக அமைவுகள்
- கனிகள் மற்றும் விதை பரவுதல்
|
7 |
சூழல்மண்டலம் |
- சூழல்மண்டலத்தின் அமைப்பு
- சூழல்மண்டலத்தின் செயல்பாடுகள்
- தாவர வழிமுறை வளர்ச்சி
|
8 |
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் |
- பசுமை இல்ல விளைவும் புவி வெப்பமடைதலும்
- வனவியல்
- காடழிப்பு
- புதிய காடு வளர்ப்பு
- ஆக்கிரமிப்பு செய்துள்ள அயல்நாட்டு தாவரங்கள்
- பாதுகாப்பு
- கார்பன் கவரப்படுதல் மற்றும் சேமிப்பு
- மழைநீர் சேகரிப்பு
- சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீடு
- புவியியல்சார் தகவல் அமைப்புகள்
|
பொருளாதாரத் தாவரவியல் |
9 |
பயிர் பெருக்கம் |
- மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு
- தாவரங்களை வளர்ப்புச்சூழலுக்கு உட்படுத்துதல்
- வேளாண்மையின் தோற்றம்
- இயற்கை வேளாண்மை
- பயிர் பெருக்கம்
- பாரம்பரியப் பயிர் பெருக்க முறைகள்
- நவீன தாவரப் பயிர்ப்பெருக்க தொழில்நுட்பம்
|
10 |
பொருளாதாரப் பயனுள்ள தாவரங்களும் தொழில்முனைவுத் தாவரவியலும் |
- உணவுத் தாவரங்கள்
- நறுமணப்பொருட்கள் மற்றும் சுவையூட்டிகள்
- நார்கள்
- மரக்கட்டை
- மரப்பால்
- மரக்கூழ்
- சாயங்கள்
- ஒப்பனைப் பொருட்கள்
- பாரம்பரிய மருத்துவ முறைகள்
- மூலிகைத் தாவரங்கள்
- தொழில் முனைவுத் தாவரவியல்
|
சமச்சீர் கல்வி உயிரியல் – விலங்கியல் பாடத்திட்டம்
சமச்சீர் கல்வி கணித பாடத்திட்டம்
மதிப்பெண்ணை அதிகரிப்பதற்கான கற்றல் திட்டம்
தேர்வுக்கு தயாராவதற்கான குறிப்புகள்
12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெற உதவும் மிக பயனுள்ள முக்கியமான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- நீங்கள்தான் உங்களது மிகப்பெரிய போட்டியாளர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடந்த முறையை விட நல்ல மதிப்பெண்களை பெற முயற்சி செய்யுங்கள். சவால்களை எதிர்கொள்ளுங்கள். கடந்த தேர்வில் எடுத்த மதிப்பெண்களை விட 20% அதிகம் எடுக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் பெற்ற முந்தைய மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்களை இலக்காகக் வைத்திருக்கவும். தனிப்பட்ட பாடங்களில் மதிப்பெண்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் மேம்படுத்த விரும்பும் பகுதிகளை பகுப்பாய்வு செய்ய இது உதவக்கூடும். மேலும், அதிக மதிப்பெண்கள் பெற இது உங்களுக்கு உதவும்.
- வாழ்க்கையின் முக்கியமான சூழ்நிலைகளில் நேர்மறையான அணுகுமுறையைப் பேணுவது மிகவும் அவசியமானது. இந்த அணுகுமுறையால், பல கடினமான பிரச்சனைகளை உங்களால் எளிதாக சமாளிக்க முடியும். நேர்மறையான எண்ணம் அதிக தன்னம்பிக்கையை பராமரிக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் மிகவும் கடினமான தேர்வுகளில் கூட நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற முடியும். 12 ஆம் வகுப்பு சமச்சீர் தேர்வுகளில், நேர்மறையான சிந்தனையுடன் அதிக நம்பிக்கை கொண்டிருப்பது, கடினமான கேள்விகளை எளிதில் முறியடிக்க உதவும்.
- நம்மில் பெரும்பாலோர் ஒவ்வொரு சமச்சீர் பாடத்திற்கும் கிடைக்கும் எண்ணற்ற குறிப்பு புத்தகங்களில் மூழ்கிவிடுகிறோம். இந்த புத்தகங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த உதவுகின்றன. இருப்பினும், பெரும்பாலான மாணவர்கள் முதன்மை பாடத்திட்ட புத்தகத்திற்கு பதிலாக இது போன்ற புத்தகங்களில் இருந்து மட்டுமே கற்றுக்கொள்கிறார்கள். வல்லுனர்களின் கூற்றுப்படி, பள்ளி பாடப் புத்தகம் அதாவது முதன்மை பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை நம்புவது மற்றும் புத்தகத்தில் உள்ள அனைத்து டாபிக்களையும் கற்றுக்கொள்வது தான் எப்போதும் மிக சிறந்த யோசனையாகும்.
- நீங்கள் அறிவியல் பிரிவில் இருந்தால், நீங்கள் இயற்பியல் மற்றும் எண்கணிதத்தில் சிறந்து விளங்கலாம், ஆனால் வேதியியலில் அவ்வளவு சிறப்பாக இல்லாமல் போகலாம். பலவீனமான பகுதிகளைக் கண்டறிந்து, உங்கள் இறுதி மதிப்பெண்களை அவை பாதிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்கள் செய்யும் பொதுவான தவறு என்னவென்றால், அவர்கள் பலவீனமாக இருக்கும் பாடங்களைப் படிக்க விரும்புவதில்லை. டாபிக்கைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, நீங்கள் பலவீனமாக இருக்கும் விஷயங்களை கண்டறிந்து, அவற்றைப் பலப்படுத்த முயற்சி செய்யுங்கள்.
தேர்வு எழுதுவதற்கான உத்திகள்
- 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி பொதுதேர்வு நீங்கள் இதுவரை எடுத்ததில் மிகவும் கடினமான தேர்வாக இருக்கும். எனவே சீக்கிரம் அதற்கு தயாராக தொடங்குங்கள். பொதுத் தேர்வுக்கு தயாராகும் போது மிக முக்கியமாக நேர மேலாண்மை திறன்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் பின்பற்ற வேண்டிய தினசரி அட்டவணையை உருவாக்குங்கள். மதிப்பெண்களை கணிசமாக அதிகரிக்க உதவும் என்பதால், கிடைக்கும் சிறிது நேரத்தையும் படிப்பதற்காக பயன்படுத்துங்கள். உங்கள் மனம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்போது, நினைவில் கொள்ள விரும்பும் பாடங்களை முதலில் படிக்கவும். ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணிநேரம் படிப்பிற்காக முதலீடு செய்யுங்கள். ஒவ்வொரு பாடத்திற்கும் சமமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். இதனால், அனைத்து பாடத்தையும் உங்களால் படித்து முடிக்க முடியும்.
- பழைய வினாத்தாள்கள் கல்லூரிக் மாணவர்களுக்கு பெரும் சொத்து. முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்த மாணவர்களால் பொதுத் தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும். காலக்கெடுவை மனதில் வைத்து, முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைத் தீர்க்கவும். வினாத்தாளைப் பகுதிகளாகத் தீர்க்கவோ அல்லது தேவைக்கு அதிகமாக நேரத்தை எடுத்துக் கொள்ளவோ கூடாது. இதனால் இலக்கை அடைய முடியாமல் போகலாம். தாளைத் தீர்க்கும் போது, தேர்வுக் கூடத்தில் அமர்ந்திருப்பது போல் நினைத்துக்கொள்ளவும். உங்கள் குறைபாடுகளை நீங்கள் உடனடியாக சரி செய்ய முடியாது. ஆனால் அதனை பயிற்சி மூலம் நீங்கள் சரி செய்யலாம். 10 வருட வினாத்தாள்களை பயிற்சி செய்வதன் மூலம் முயற்சி செய்யுங்கள்.
- கிறுக்காமல் தெளிவாக எழுதப்பட்ட தேர்வுத்தாள்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றே. எனவே பதில் எழுதி பார்ப்பதற்கு தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள். அழகான கையெழுத்து மற்றும் எழுத்துப் பிழைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள். பல மாணவர்கள் இந்த எளிய விஷயங்களை செய்யாமல் புறக்கணிக்கிறார்கள். ஆனால் இவை பொதுத் தேர்வுகளில் சில கூடுதல் மதிப்பெண்களைப் பெற உதவுகிறது. மேலும், இந்த கூடுதல் மதிப்பெண்கள் ஒட்டுமொத்த சதவீதத்தை ஓரளவுக்கு உயர்த்த உதவுகின்றன.
- பரீட்சை நேரங்கள் மிகவும் அழுத்தமானவை என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. எனவே, இந்த கட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக்கொள்வது அவசியம். ஒழுங்காக சாப்பிடுங்கள், ஓய்வெடுங்கள் மற்றும் மனதை சாந்தமாக வைத்திருக்கும் செயல்களை செய்யவும். இது மிகவும் முக்கியமானது, ஏனென்றால் உங்கள் உடல்நிலை சரியில்லை என்றால், தேர்வுகளின் கடினத்தை கையாள உங்களுக்கு சிரமாக இருக்கக்கூடும் .
விரிவான கற்றல் திட்டம்
- தேர்வு நாளில் முடிந்தவரை அமைதியாக இருங்கள். கடைசி நிமிட ரிவிஷனை தவிர்க்கவும். தேர்வு சம்மந்தமான புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகிய அனைத்தையும் வீட்டில் வைத்துவிட்டு, சுதந்திரமான மனதுடன் தேர்வு மையத்தை அடைவதே நல்லது. உங்கள் கவனம் வேறு எதிலும் சிதறாதவாறு பார்த்துக்கொள்ளவும்.
- உங்கள் மனவலிமையை நம்புங்கள். தேர்வு மணி அடித்ததும், வினாத்தாள்கள் வழங்கப்பட்டவுடன் நீங்கள் அற்புதமாகச் செய்வீர்கள் என்று உங்களுக்கு நீங்களே நம்பிக்கை சொல்லுங்கள். ஒவ்வொரு கேள்வியையும் கவனமாகப் படித்து, முதலில் எதற்கு பதிலளிக்க வேண்டும் என்பதைத் திட்டமிடுங்கள். முதலில் உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளுக்கு பதிலளிக்கவும். இவற்றை முதலில் எழுதினால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் பதில்களை எழுதியப் பிறகு, அவற்றை மீண்டும் சரிபார்க்கவும். ஒரு குறிப்பிட்ட கேள்விக்கான பதில் உங்களுக்குத் தெரியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். அதனை கடைசியாக எழுதிக் கொள்ளலாம்.
- ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அவை உங்கள் நேரத்தை வீணடித்துவிடும்.
- உங்கள் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். வாட்ஸ்அப் போன்ற மெசஞ்சர்கள் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். படிப்பு சம்மந்தமாக அவற்றை பயன்படுத்துவதைக் கூட தவிர்க்கவும்.
முந்தைய ஆண்டு பகுப்பாய்வு
முந்தைய ஆண்டு வினாத்தாள்
எந்தவொரு பொதுத் தேர்வுக்கும் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை படிப்பது மிகவும் முக்கியமானது. அதிலிருந்து 60% கேள்விகள் வர வாய்ப்புள்ளது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் கேட்டகப்பட்ட கேள்விகள் எது என்பதை அறிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு 12 ஆம் வகுப்பு மாணவர்கள் முந்தைய ஆண்டு வினாத்தாள்களை கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்யலாம்:
தமிழ்நாடு சமச்சீர் கல்வி 12ஆம் வகுப்பு முந்தைய வருட கேள்வித் தாள்கள்
மாணவர்களுக்கான கலந்தாய்வு
சமச்சீர் கல்வி 12ஆம் வகுப்பிற்கு பிறகு, எந்த தொழில்துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது எந்தவொரு குழந்தைக்கும் மிகவும் கடினமான முடிவு ஆகும். ஒரு புகழ்பெற்ற நிறுவனம் அல்லது பள்ளியைத் தேர்ந்தெடுக்கும் போது, மாணவர்கள் பொதுவாக சகமாணவர்களின் மனநிலையைப் பின்பற்றி மிகவும் பிரபலமான படிப்புகளில் சேருவது, பெற்றோரின் தேவையின் அடிப்படையில் ஒரு படிப்பைத் தேர்ந்தெடுப்பது அல்லது அவர்களின் நண்பர்களைப் பின்தொடர்வது போன்றவைகளை செய்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் தங்கள் சொந்த பலம், பலவீனங்கள் அல்லது ஆர்வங்களை முதலில் மதிப்பிடாமல் பாடங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு சில வெளியுலக அழுத்தம் காரணமாக அவர்கள் இது போன்ற மோசமான முடிவுகளை எடுக்கிறார்கள். பின்னர் படிப்புகள் அல்லது கல்லூரிகளை மாற்ற முயற்சிக்கிறார்கள்.
COVID-19 தொற்று காரணமாக, தமிழ்நாடு கல்வி வாரியம், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு ஆதரவாக பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மனநலம் மற்றும் நல்வாழ்வு பற்றிய கையேடு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் உளவியல் சமூக நல்வாழ்வு மற்றும் மனநலம் ஆகியவை அடங்கும்.
பெற்றோர்/பாதுகாவலருக்கான கலந்தாய்வு
கே1: சமச்சீர் கல்வி 12ஆம் வகுப்பில் படிக்கும் எனது குழந்தைக்கு இயற்பியலில் அதிக மதிப்பெண்கள் பெற எப்படி உதவுவது?
ப: கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் குழந்தை இயற்பியலில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்.
- 12ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இயற்பியல் பாடத்தை உள்ளடக்கிய பரிந்துரைக்கப்பட்ட பாடப்புத்தகம் தான் இயற்பியல் வாரியத் தேர்வில் பின்பற்றப்படுகிறது. அதனால், மாணவர்கள் 12 ஆம் வகுப்புக்கான சமச்சீர் பாடத்திட்ட இயற்பியல் புத்தகத்தைப் படிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- முக்கியமான சூத்திரங்கள் மாணவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கும் படி இருக்க வேண்டும். இதனால், அவர்களால் எண்ணியல் கேள்விகளுக்கு விரைவாக பதிலளிக்க முடியும்.
- சமச்சீர் கல்வி இயற்பியல் தாளில், வரைபடம் அல்லது சுற்று (circuit) போன்ற வரைதல் கேள்வி இருக்கலாம். இந்தக் கேள்வியில் முழு மதிப்பெண்களைப் பெற மாணவர்கள் வரைபடத்தின் முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
- மாணவர்கள் முந்தைய ஆண்டு 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி இயற்பியல் தேர்வு தாள்களை தவறாமல் பயிற்சி செய்ய வேண்டும். இது அவர்களின் மனது மற்றும் உடலை பரீட்சைக்குத் தயாராக்கும்.
கே2: சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பில் படிக்கும் எனது குழந்தைக்கு கணிதத்தில் அதிக மதிப்பெண்கள் பெற எப்படி உதவுவது?
ப: கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் உங்கள் குழந்தை கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்.
- மாணவர்கள் சமச்சீர் கல்வி கணிதத் தாளின் அமைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
- தேர்வு அமைப்பு மற்றும் வாரியத்தால் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டத்தை மாணவர்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும்.
- அனைத்து முக்கியமான தலைப்புகள் மற்றும் கருத்துகளை உள்ளடக்கிய ஒரு படிப்பதற்கான உத்தியை மாணவர்கள் உருவாக்க வேண்டும். சிறந்த மதிப்பெண் பெற, அவர்கள் முழு பாடப்புத்தகத்தையும் படிக்க வேண்டும். பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளை மையமாக கொண்டு தான் முழு தேர்வும் இருக்கிறது.
- தமிழ்நாடு கல்வி வாரியம் ஒவ்வொரு கல்வியாண்டும் மாதிரி தாள்களை விநியோகம் செய்கிறது. இந்த ஆண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு கல்வி வாரியம் மாற்றியமைத்துள்ளதால் மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த கணித மாதிரி தாள்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் பல்வேறு இடங்களில் கிடைக்கிறது.
- சமச்சீர் கல்வி கணிதத்தில் தேர்ச்சி பெறுவதற்கு சமன்பாடுகள் மற்றும் கருத்துகளை மனப்பாடம் செய்வது அவசியம்.
- சமச்சீர் கல்வி கணிதத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, 12 ஆம் வகுப்பில் உள்ள கருத்துக்கள் மட்டும் தான் முக்கியம். இருந்தாலும், முந்தைய வகுப்புகளின் சமன்பாடுகளையும் நினைவில் வைத்திருக்க வேண்டும். சமன்பாடுகள், கோட்பாடுகள் மற்றும் செயல்முறைகள் பற்றிய கையால் எழுதப்பட்ட குறிப்புகளை கடைசி நிமிட ரிவிஷனிற்கு பயன்படுத்தவும்.
கே3: எனது குழந்தையின் எதிர்கால தொழில் பாதையை தீர்மானிக்கும் போது நான் என்ன காரணிகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்?
ப: ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் தொழில் பாதை அவர்களின் எதிர்கால வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மாணவர்களை அவர்களின் ஆர்வங்களைத் தொடரவும், அவர்களின் இலக்குகளை அடைய கடினமாக உழைக்கவும் ஊக்குவிப்பதற்காக அவர்களின் விருப்பங்களை ஆராய உதவுங்கள். விவாதிக்கப்படும் நான்கு பிரிவுகளில் அறிவியல், வணிகம் மற்றும் மனிதநேயம் மற்றும் அவற்றைத் தொடர தேவையான திறன்கள் ஆகியவை அடங்கும். தேவையான திறமைகள் மற்றும் பாடத்திட்டத்தின் முதன்மை பகுதிகளை எடுத்துரைப்பதன் மூலம் நாங்கள் மூன்று பிரிவுகளை வடிவமைத்து உள்ளோம். இதன் விளைவாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சிரமங்களைப் பற்றி நன்கு அறிந்து அவர்களுக்கு அதிக சுமைகளை ஏற்படுத்தாமல், அந்தப் பிரச்சினைகளை சமாளிக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்.
கே4: சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பில் படிக்கும் எனது குழந்தைக்கு வேதியியலில் அதிக மதிப்பெண்களைப் பெற நான் எப்படி உதவுவது?
ப: தமிழ்நாடு கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வேதியியல் தேர்வுக்கு நீங்கள் நன்கு தயாராவதற்கு உதவும் சில கற்றல் உத்திகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
- தேர்வாளர்கள் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட சில கேள்விகளை திரும்ப திரும்ப கேட்கிறார்கள். ஆகவே முந்தைய ஆண்டுகளின் தேர்வுதாள்களை பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது.
- நீங்கள் படிக்கும் போது முக்கியமான பிரிவுகள் மற்றும் தொடர் பாடங்களைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் கடைசியில் ரிவிஷன் செய்யும் போது அவற்றை மீண்டும் பார்த்துக்கொள்ளலாம்.
- தமிழ்நாடு வாரியம் வழங்கி உள்ள பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் மற்றும் கருப்பொருட்களைக் கொண்டுள்ளது.
- உங்கள் வேதியியல் தாளில் நல்ல மதிப்பெண்களைப் பெற, வரைபடங்கள் மற்றும் கட்டவரைபடங்கள் உட்பட அனைத்தையும் படிக்கவும். அதைத் தொடர்ந்து தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகள் மற்றும் பயிற்சி கேள்விகளில் கவனம் செலுத்துங்கள். கடினமான கருத்துக்களை விரைவாகத் தெளிவுபடுத்த உங்கள் பாடப்புத்தகங்களுக்கு அடுத்ததாக ஒரு குறிப்புப் புத்தகத்தை வைத்துக் கொள்ளுங்கள். படிக்கும்போது முக்கியமான மற்றும் கடினமான கேள்விகளைக் குறித்துக்கொள்ளவும்.
- எந்த ஒரு தேர்வு எழுதும்போதும் நேரம் என்பது நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயமாகும். நீண்ட கேள்விக்கு பதிலளிப்பது முதலில் எளிமையாகத் தோன்றினாலும், அது நீண்ட நேரம் எடுப்பது மட்டுமல்லாமல் முழுமையான மதிப்பெண்களுக்கு உத்தரவாதம் அளிக்காது. ஏனெனில் மற்ற பதில்களை அவசர அவசரமாக எழுதும் போது முக்கியமான வார்த்தைகள் அல்லது புள்ளிகளை நீங்கள் மறக்க நேரிடலாம்.
கே4: சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பு படிக்கும் எனது குழந்தைக்கு உயிரியலில் அதிக மதிப்பெண்களைப் பெற நான் எப்படி உதவுவது?
ப: மாணவர்கள் தங்கள் படிப்பை திறம்பட ஒழுங்கமைக்க உதவக்கூடிய தமிழ்நாடு கல்வி வாரியம் 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி உயிரியல் பாடத்திற்கு தயாராவதற்கான பரிந்துரைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
12 ஆம் வகுப்பு உயிரியலுக்கான கட்டமைப்பை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
- ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு கிழவி வாரியம் மாணவர்கள் தேர்வைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ளவும், போதுமான அளவு தயார் செய்யவும் உதவும் மாதிரியைப் வெளியிடுகிறது.
- தேர்வு மாதிரியை முன்கூட்டியே தெரிந்துகொள்வது தேர்வில் நேரத்தைச் சேமிக்க உதவும். சமச்சீர் பொதுத் தேர்வு தேர்ந்தெடுக்கும் கேள்விகளை அனுமதித்தாலும், பொதுத் தேர்வில் பெரும்பாலான தேர்ந்தெடுப்பது அடிப்படையிலான கேள்விகள் ஒரே பாடத்தில் இருந்து தான் வருகின்றன.
- மாணவர்கள் முழுப் பாடத்திட்டத்தையும் முழுமையாகப் படித்து, தேர்வில் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்கும் தங்கள் திறனில் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் வரையப்பட்டிருப்பதால் மாணவர்கள் தங்களின் பொதுத் தேர்வுக்கு தயாராகும் போது பாடத்திட்டத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
- கேள்விகளின் வகைகள் மற்றும் வடிவங்களை நன்கு புரிந்துகொள்ள மாணவர்கள் முந்தைய ஆண்டு தேர்வுகளின் 12 ஆம் வகுப்பு சமச்சீர் உயிரியல் மாதிரித் தாள்களைத் பயிற்சி செய்யலாம். சில கேள்விகளைத் தீர்ப்பதன் மூலம், எந்தவொரு தேர்வுக் கேள்வியையும் சமாளிக்க அவர்களுக்கு போதுமான பயிற்சி கிடைக்கும். இதனால், மாணவர்களின் நேர மேலாண்மை திறனும் அதிகரிக்கும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
தேர்வை பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
கே1: தனியார் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எங்கு விண்ணப்பிக்கலாம்?
ப: நோடல் மையம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். நோடல் மைய விவரங்கள் தமிழ்நாடு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் (http://www.dge.tn.gov.in/) வெளியிடப்படும்.
கே2: சான்றிதழ் நகலிற்கு விண்ணப்பிப்பது எப்படி?
ப: அசல் சான்றிதழை இழந்த மற்றும் நகல் தேவைப்படும் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மாணவர் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும், விண்ணப்பத்தை முறையாக பூர்த்தி செய்து, நகல் சான்றிதழ் வழங்குவதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். DEO/DIET மூலம் அரசு தேர்வுகள் இயக்குனரகத்திற்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். அசல் சான்றிதழ் உண்மையிலேயே தொலைந்துவிட்டது என்பதற்கு சான்றாக தாசில்தார் பதவிக்குக் குறையாத வருவாய் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட சான்றிதழை இணைக்க வேண்டும். தனியார் விண்ணப்பதாரர்களைப் பொறுத்தவரை, விண்ணப்பங்களை நேரடியாக அரசுத் தேர்வுகள் இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கலாம்.
கே3: நகல் சான்றிதழ்களுக்கான கட்டண விவரங்கள் என்னவாக இருக்கும்?
ப:
(i) முதல் முறையாக நகல் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் ரூ.505/-
(ii) இரண்டாவது முறையாக நகல் சான்றிதழுக்கு விண்ணப்பித்தல் Rs. 755/-
கே4: இடம்பெயர்வு சான்றிதழ்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
ப: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், எந்த விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கிறார் என்பதன் அடிப்படையில் மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு சான்றிதழின் நகல் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் வரைவு காசோலையுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அல்லது, இந்தத் துறையால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு விண்ணப்பதாரர் சலான்(Challan) எடுக்கலாம்.
கே5: இடம்பெயர்வு சான்றிதழ்களுக்கான கட்டண விவரங்கள் என்னவாக இருக்கும்?
ப: இடம்பெயர்வுச் சான்றிதழுக்கான கட்டணம், அதாவது, தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட ரூ.505/-க்கான வரைவு காசோலை அல்லது ரூ.505/-க்கான சலான், ஏதேனும் தமிழ்நாடு மாநில அரசின் கருவூலக் கிளையின் மூலம் சென்னை – 600 006, அரசுத் தேர்வுகள் இயக்குனருக்குச் செலுத்தப்பட வேண்டும்.
கல்வி நிறுவனங்களின் பட்டியல்
பள்ளிகள்/கல்லூரிகளின் பட்டியல்
சமச்சீர் பள்ளிகளின் பட்டியல்
வ.எண் |
பள்ளி வாரியம் |
சமச்சீர் பள்ளியின் பெயர் |
1 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
சிந்தாதிரிப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப் பள்ளி |
2 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
குருநானக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி |
3 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
K.C. சங்கரலிங்க நாடார் மேல்நிலைப் பள்ளி |
4 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி |
5 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
P.S. மேல்நிலைப் பள்ளி |
6 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
தி இந்து மேல்நிலைப் பள்ளி |
7 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி |
8 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
வெஸ்லி மேல்நிலைப் பள்ளி |
9 |
தமிழ்நாடு கல்வி வாரியம் |
MCC பொதுப் பள்ளி |
தமிழ்நாடு மாநில வாரிய பள்ளிகளின் முழு பட்டியலையும் பார்க்க அல்லது பதிவிறக்க தமிழ்நாடு சமச்சீர் பள்ளி பட்டியல்
பெற்றோர் கலந்தாய்வு
கே1. சமச்சீர் கல்வி 12 ஆம் வகுப்பில் எனது குழந்தை எவ்வாறு இயற்பியலில் சிறப்பாக வெற்றி பெற முடியும்?
ப. சமச்சீர் கல்வி இயற்பியலில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவதற்கான சில உத்திகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
- கணிதத்தை கற்றுக்கொள்ள சிரமப்படும் மாணவர்கள் சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள நவீன இயற்பியலைப் படிப்பதன் மூலம் தொடங்க வேண்டும். குறைக்கடத்தி அத்தியாயம் மிகவும் அவசியமான ஒன்றாகும். இது சராசரி 8 புள்ளிகள் மதிப்புடையது. அணுக்கள் மற்றும் அணுக்கருக்கள் மொத்தம் ஆறு புள்ளிகள் மதிப்புடையவை.
- கதிர்வீச்சின் இருமணப்பண்பு பின்வரும் அத்தியாயங்களின் தொகுப்பாகும். மேலும், இது 4 புள்ளிகள் மதிப்புடையது. தகவல் தொடர்பு அமைப்புக்கு மூன்று புள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களை நன்கு படித்து வைத்திருப்பது மாணவர்கள் இயற்பியலில் உயர் தரங்களைப் பெற உதவுகிறது.
- இப்போது நீங்கள் ஒளியியல் போன்ற அத்தியாவசிய மற்றும் கடினமான டாபிக்களில் கவனம் செலுத்த வேண்டும். இது மாநில வாரிய தேர்வில் 14 புள்ளிகள் மதிப்புடையது.
- மின்னோட்டம் மற்றும் மின்சாரம் என்பது 7-புள்ளிகள் கொண்ட அத்தியாயம், அதுவும் இது எளிதான ஒன்று. மின்னியல் அல்லது காந்தவியல் பற்றி நீங்கள் இதுவரை படிக்கவில்லை என்றால், இந்த அத்தியாயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை மற்றவற்றை விட அதிக நேரம் எடுக்கும். மறுபுறம், இந்த அத்தியாயங்கள் போட்டித் தேர்வுகளுக்கு முக்கியமானவை.
- நீங்கள் சிறப்பாகச் செயல்பட விரும்பினால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றொரு அலகு EMI ஆகும். பொதுத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் இரண்டிற்கும் இது ஒரு முக்கியமான அலகு.
- கதிர் வரைபடம் மற்றும் பிற தொடர்புடைய வரைபடங்களை கவனமாகப் பயிற்சி செய்யவும். வரைதல் மற்றும் படிப்பது பல டாபிக்களை விரைவாகவும் எளிதாகவும் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.
கே2. எனது குழந்தை 12 ஆம் வகுப்பில் சமச்சீர் கல்வி கணக்கியலில் 90+ மதிப்பெண்களை பெற என்ன செய்ய வேண்டும்?
ப. சமச்சீர் கணக்கியல் என்பது ஒரு தத்துவார்த்த மற்றும் செய்முறை தலைப்பு. மாணவர்கள் அடிக்கடி பயிற்சி செய்தல், கவனமாக திட்டமிடுதல் மற்றும் தயார்நிலையில் இருத்தல் ஆகியவற்றால் நல்ல முடிவுகளை அடைய முடியும்.
- முதலாவதாக, சமச்சீர் கல்வி கணக்கியலை மனப்பாடம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. டாபிக்கின் அடிப்படைகள் மற்றும் கொள்கைகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- வகுப்பில் எப்போதும் கவனம் செலுத்துங்கள் – வகுப்பில் எப்போதும் கவனம் செலுத்தி விவாதிக்கப்படும் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு ஏதாவது புரியவில்லை என்றால், கேள்விகளைக் கேளுங்கள்.
- பயிற்சி – நீங்கள் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும்போது, வகுப்பில் விவாதிக்கப்பட்ட டாபிக்கில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கவும். இது உங்கள் அடித்தளத்தை பலப்படுத்தும் மற்றும் உங்களது நம்பிக்கையை வளர்க்கும். ஜர்னல், லெட்ஜர் மற்றும் பேலன்ஸ் ஷீட்டை உருவாக்க நீங்கள் பயன்படுத்தும் பார்மட்களில் அதிக கவனம் செலுத்துங்கள்.
- படிக்க வேண்டிய படைப்புகள் – எங்கள் கருத்துப்படி, T.S.க்ரேவால் மற்றும் D.K.கோயல் கணக்கியல் பற்றிய புத்தகங்களிலிருந்து அனைத்து எடுத்துக்காட்டுகளையும் பயிற்சிகளையும் தீர்த்துப் பழகவும்.
- பங்கு மூலதனத்திற்கான கணக்கு, கூட்டாண்மை நிறுவனங்களுக்கான கணக்கு, இலாப நோக்கற்ற நிறுவனங்களுக்கான கணக்கு மற்றும் பணப்புழக்க அறிக்கைகள் ஆகியவை படிக்க வேண்டிய மிக முக்கியமான பாடங்கள். இருப்பினும், உங்களுக்கு உண்மையிலேயே உயர்ந்த குறிக்கோள் (90+) இருந்தால், நீங்கள் அனைத்து டாபிக்களையும் பயிற்சி செய்ய வேண்டும்.
- கணக்கீடுகள்- பாடப்புத்தகங்கள் (T.S.க்ரேவால்ஸ்/D.K.கோயல்), மாதிரித் தாள்கள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் கேள்விகள் ஆகியவற்றிலிருந்து பல்வேறு கணக்குகளை தீர்க்கவும். கணக்கீடுகளில் தேர்ச்சி பெறவும் இது உங்களுக்கு உதவும்.
- கணக்கியல் சமச்சீர் வாரிய தேர்வை எடுப்பதற்கு முன், நீங்கள் குறைந்தது 15 மாதிரி தாள்களை முடிக்க வேண்டும். தேர்வுகளுக்கு முன், 20 பயிற்சி தாள்களை முடிக்க முயற்சிக்கவும். வணிகக் கணக்கியலுக்கு உதவி புரியும் T.S க்ரேவால்ஸிலிருந்து 15 மாதிரி தாள்கள் மற்றும் டி.கே. கோயலின் கணக்கியலுக்கு உதவி புரியும் 5 தாள்களை முடிக்க திட்டமிடுங்கள்.
- தமிழ்நாடு பள்ளி வாரியம் வழங்கும் மாதிரி தாளை தீர்க்க மறந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு மிகவும் உதவும். தமிழ்நாடு கல்வி வாரியம் வெளியிடும் மாதிரி தாளில் இருந்து சில நேரங்களில் 2-3 கேள்விகள் கேட்கப்படும்.
- கடைசியாக, கேள்விகளை நன்றாக படித்துவிட்டு அதற்கு பதிலளியுங்கள். கேள்விகளை தீர்ப்பதில் சிரமங்கள் இருந்தால் ஒரு குறிப்பிட்ட கேள்வியிலேயே ஒட்டிக்கொள்ளாதீர்கள். அதை தவிர மற்ற கேள்விகளுக்கும் பதிலளியுங்கள்.
கே3. எனது குழந்தை 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி வணிகம் படித்தால் எந்த பிரிவை எடுக்க வேண்டும்?
ப. சமச்சீர் கல்வி வணிகவியல் படிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:
- பட்டய கணக்காளர்
- வணிக மேலாண்மை
- விளம்பரம் மற்றும் விற்பனை மேலாண்மை
- டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- மனித வள மேம்பாடு
கே4. என் குழந்தை 12 ஆம் வகுப்பு சமச்சீர் கல்வி அறிவியல் படித்தால் எந்த பிரிவை தேர்ந்தெடுக்க வேண்டும்?
ப. அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:
- BTech/BE(பொறியியல்)
- இளங்கலை மருத்துவம் & அறுவை சிகிச்சை இளங்கலை( MBBS)
- மருந்தியல் இளங்கலை
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப இளங்கலை
- BSc மனையியல்/தடய அறிவியல்
எதிர்கால தேர்வுகளின் பட்டியல்
12ஆம் வகுப்பு தமிழ்நாடு மாநில கல்வி வாரியத்திற்குப் பின் எடுப்பதற்கான எதிர்காலத் தேர்வுகளின் பட்டியல்
பிரிவு |
தேர்வுகள் |
பொறியியல் |
கூட்டு நுழைவுத் தேர்வு (JEE) முதன்மை JEE அட்வான்ஸ்டு பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் அட்மிஷன் டெஸ்ட் (BITSAT) நுழைவுத் தேர்வு COMED-K IPU-CET (B. Tech) மணிப்பால்(B. Tech) VITEEE AMU (B. Tech) PCM உடன் NDA நுழைவுத் தேர்வு (MPC) |
மருத்துவம் |
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(NEET) AIIMS JIPMER |
பாதுகாப்பு சேவைகள் |
இந்திய கடல்சார் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு இந்திய கடற்படை B.Tech நுழைவுத் திட்டம் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப நுழைவுத் திட்டம்(TES) · தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி தேர்வு(I) |
ஃபேஷன் மற்றும் வடிவமைப்பு |
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) நுழைவுத் தேர்வு வடிவமைப்பு சேர்க்கைக்கான தேசிய நிறுவனம் வடிவமைப்பிற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு(AIEED) சிம்பியோசிஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் தேர்வு காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மயீரின் MIT இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் கட்டிடக்கலையில் தேசிய திறன் தேர்வு சுற்றுச்சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப மையம்(CEPT) |
சமூக அறிவியல் |
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் IIT மெட்ராஸ் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் நுழைவுத் தேர்வு(HSEE) TISS இளங்கலை சேர்க்கை தேர்வு(TISS-BAT) |
சட்டம் |
பொது-சட்ட சேர்க்கை தேர்வுஅகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு(AILET) |
அறிவியல் |
கிஷோர் வைக்யானிக் ப்ரோட்சஹன் யோஜனா(KVPY) தேசிய ஆய்தல் நுழைவுத் தேர்வு(NEST) |
கணிதம் |
இந்திய புள்ளியியல் நிறுவனம் சேர்க்கை பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பல்வேறு B.Sc திட்டங்கள் பனஸ்தலி வித்யாபீட சேர்க்கை |
நடைமுறை அறிவு/தொழில்துறை இலக்குகள்
எதிர்கால திறன்கள்
- வன்பொருள் மற்றும் மென்பொருள் கூறுகள் எண்ட்பாயிண்ட் IoT சாதனங்களில் இணைக்கப்பட்டுள்ளன. டோஸ்டர் முதல் தொழிற்சாலை இயந்திரம் வரை அனைத்திலும் பிராசஸர்கள் ஒருங்கிணைக்கப்படுவதால், எம்பெட்டட் மென்பொருள் பொறியாளர்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஒரு பொறியியலாளருக்கு, எந்த ஒரு சூழலிலும் இயற்பியல் மென்பொருளை எழுத தெரிந்திருக்க வேண்டும் மற்றும் துல்லியமில்லாத தரவைச் சமாளிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- IoT சாதனங்கள் பொதுவாக வரையறுக்கப்பட்ட கம்ப்யூட்டிங் ஆதாரங்களை கொண்டிருப்பதால், எம்பெட்டட் மென்பொருளை உருவாக்குவதற்கு C மொழியே தேர்ந்தெடுக்கப்படுகிறது. இது சிறியது, இதற்கு சிறிய செயலாக்க ஆதாரங்களே தேவைப்படுகிறது மற்றும் இது விரைவான செயல்திறனை வழங்குகிறது. மேலும், இது குறைந்த அளவிலான நிரல்களை உருவாக்குவதற்கு ஏற்றது.
- C++ ஆனது பொதுவாக C க்கு முன்-பிராசஸராக பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இதில் படம் சார்ந்த அம்சங்கள் இல்லை. ஜாவா SE எம்பெட்டட் மற்றும் ஜாவா ME எம்பெட்டட் போன்ற பிற மொழிகள் சமீபத்தில் எம்பெட்டட் பொறியாளர்களிடையே பிரபலமடைந்துள்ளன.
- GPIO (General Purpose Input Output) மற்றும் I2C (Inter-Integrated Circuit — pronounced I-squared-C) இடைமுகங்களுடனான அனுபவம், மைக்ரோகண்ட்ரோலருக்கும் இணைக்கப்பட்ட சாதனத்திற்கும் இடையே தகவல்தொடர்புகளை உருவாக்கப் பயன்படுகிறது. இது எம்பெட்டட் மென்பொருள் மேம்பாட்டிற்கான மற்றொரு முக்கியமான அம்சம்.
தொழில்துறைத் திறன்கள்
நீங்கள் ஆசைப்படும் வேலையை அடைய விரும்பினால் அல்லது உங்கள் தற்போதைய வாழ்க்கையில் செழிக்க விரும்பினால், கீழே பட்டியலிடப்பட்டுள்ள திறன்களைப் பாருங்கள். இதன் அடிப்படையில் உங்கள் நிலை என்ன என்பதை மதிப்பிடுங்கள். மேலும் நீங்கள் மேம்படுத்திக்கொள்ள வேண்டிய பகுதிகளை கண்டறியவும்.
வேலையை பெறுவதற்கு ஒருவர் கொண்டிருக்க வேண்டிய திறன்களின் பட்டியல் கீழே உள்ளது.
- தொடர்பியல் திறன் (கேட்டல், பேசுதல் மற்றும் எழுதுதல்)
- பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சி திறன்கள்
- வளைந்து கொடுக்கும் தன்மை/இடத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளும் தன்மை
- தனிப்பட்ட திறன்கள்
- முடிவுகளை எடுக்கும் மற்றும் சிக்கல்களைத் தீர்க்கும் திறன்
- வேலை திட்டமிடல், ஒழுங்கமைத்தல் மற்றும் முன்னுரிமை அளிக்கும் திறன்
- பல வேலைகளை செய்யும் திறன்
- தலைமை/நிர்வாகத் திறன்
- விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது
- தன்னம்பிக்கை
- மேடைப்பேச்சு
தொழில்துறை வாய்ப்புகள்/எந்த துறையை தேர்வு செய்வது?
12 ஆம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் தங்களுக்குரிய பாடங்களுக்கு ஏற்ப கீழே குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.
12 ஆம் வகுப்பு வணிக பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:
- பட்டயக் கணக்காளர்(CA)
- வணிக மேலாண்மை
- விளம்பரம் மற்றும் விற்பனை மேலாண்மை
- டிஜிட்டல் மார்க்கெட்டிங்
- மனிதவள மேம்பாடு
12 ஆம் வகுப்பு அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:
- BTech/BE(பொறியியல்)
- இளங்கலை மருத்துவம் & அறுவை சிகிச்சை இளங்கலை( MBBS)
- மருந்தியல் இளங்கலை
- மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப இளங்கலை
- BSc மனையியல்/தடய அறிவியல்
12 ஆம் வகுப்பு கலைப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு பின்வரும் தொழில் வாய்ப்புகள் உள்ளன:
- தயாரிப்பு வடிவமைப்பு
- ஊடகம் / இதழியல்
- ஃபேஷன் டெக்னாலஜி
- வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங்
- மனித வளப் பயிற்சி, பள்ளி கற்பித்தல் போன்றவை